மாரியம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு
ADDED :2356 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம் ஆயிரங் கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாள் விழாவாக நேற்று பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். காலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. ஒன்பதாம் நாள் விழாவாக பக்தர்கள் விரதம் இருந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்த அக்னி சட்டிகள் எடுப்பர். அதிகாலையில் பூக்குழியில் இறங்குவர். பத்தாம் நாள் தேரோட்டம் நடக்கிறது.ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.