கடன் தீர்க்கும் நரசிம்ம ஸ்தோத்திரம்
ADDED :2357 days ago
நரசிம்ம புராணத்தில் இடம் பெற்றுள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. அனுதினமும் இந்த ஸ்தோத்திரப் பாடலைப் பாடி நரசிம்மரை வழிபடுவதால், தீராத கடன் பிரச்னைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
பொருள்: லட்சுமிதேவியால் ஆலிங்கனம் செய்யப்பட்ட இடதுபாகத்தை உடையவரும், பக்தர்களுக்கு வரங்களைக் கொடுப்பவரும், மகா வீரருமான நரசிம்மரை, கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன். அவர் அருள்பாலிக்க வேண்டும்.