வெற்றி பெற்ற மனிதரெல்லாம்..
* வெற்றி பெற நல்லவரின் ஆலோசனையை கேளுங்கள். * முட்டாளின் பார்வைக்கு அவனது வழி சரியாகவே தோன்றும். * உண்மையை பேசு. சுதந்திரமாக இரு. * பிறர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசாதே. * தீய செயல்களை செய்து பாவத்தை சம்பாதிக்காதே. * பிறருடன் சண்டையிட்டு உங்களின் மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர். * உடன்பிறந்தோரை திட்டினால் நரகத்திற்கு செல்வீர்.* பொய் பேசி சேர்க்கும் பொருள், காற்றாய் பறக்கும். * உணவும், உடையுமே போதுமென்று திருப்தி அடையுங்கள். * நேர்மையாளனின் முடிவு அமைதியானதாக இருக்கும். * மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். * எளியவனுக்கு உதவி செய்பவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். * தீய சொல்லில் இருந்து உங்கள் நாவை காத்திடுங்கள். * சகிப்புத்தன்மை உள்ளவர்களிடம் மன அமைதி இருக்கும்.* பிறர் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் பிறருக்கு செய்யுங்கள். * புத்திசாலி பெண்ணால் வீடு வளம் பெறும். * ஏழை, ஊனமுற்றோருக்கு விருந்து கொடுங்கள்.- பொன்மொழிகள்