பைபிள் பொன்மொழிகள்
UPDATED : நவ 19, 2015 | ADDED : நவ 19, 2015
* உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல்வெளியிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி வளருகின்றனவென்று கருதிப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை. நூற்பதுமில்லை.* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம், பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால், பயப்படுகிறவன் நேசத்துக்கு பூரணமானவன் அல்ல.* உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தன் தலை மீது நெருப்புத்தணலை குவிப்பவனாவாய்.* எவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டு, தன்னை பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவனுடைய பக்தி வியர்த்தமானது.