வேண்டாமே வாக்குவாதம்
UPDATED : செப் 28, 2022 | ADDED : செப் 28, 2022
* வாக்குவாதம் வேண்டாம். மீறினால் புத்தி தடுமாறும்.* நல்ல குணம் கொண்டவர்களால் சுற்றத்தினர் மட்டுமல்ல, பூமியும் பாக்கியத்தை சேர்த்துக் கொள்கிறது.* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும்.* இன்பத்தை விட துன்பம் சிறந்தது. ஏனெனில் துன்பம் இதயத்தை வலிமையாக்குகிறது.* முட்டாள் தான் எந்த பிரச்னையிலாவது தலையிட்டுக் கொண்டே இருப்பான்.* மவுனமாயிருந்தால் முட்டாள் கூட அறிவாளியாய் மதிக்கப்படுவார்.* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனமானது.- பொன்மொழிகள்