உள்ளூர் செய்திகள்

திருப்தியுடன் வாழுங்கள்

* உணவும், உடையும் இருந்தால் அதுவே போதுமென்று திருப்தி அடைவோமாக.* பக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதா யிருக்கும்.* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச சாம்ராஜ்யம் அவர்களுடையது.* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என அழைக்கப்படுவர். * மாற்றாரை அவமதிப்பவன் பாவம் செய்கிறான். ஆனால் எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.* என் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பவன் எவனோ அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.- பைபிள்