மவுனத்தின் மதிப்பு
UPDATED : ஆக 14, 2020 | ADDED : ஆக 14, 2020
* மவுனமாயிருந்தால் முட்டாள்கள் கூட அறிவாளியாக மதிக்கப்படுவார்கள்.* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.* வாக்குவாதம் வேண்டாம். அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய பலன் ஏதுமில்லை. * மண்ணால் ஆன பானை மீண்டும் மண்ணாவது போல உயிர் மீண்டும் ஆண்டவரிடமே சேரும்.* போட்டிக்காகவும், தற்பெருமைக்காகவும் நடத்தப்படும் விருந்துக்கு செல்லாதீர்கள்.* எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லதை மட்டும் கடைபிடியுங்கள்.* தீயில் இட்ட தங்கம் ஆபரணமாக மாறுவது போல, துன்பத்தால் நற்பண்புகள் உருவாகின்றன. * நாவை அடக்கி வையுங்கள்; அது உங்களுக்கு அடிபணிந்து இயங்கட்டும். இதில் தான் வெற்றி இருக்கிறது.* உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் கேட்டதை எல்லாம் சொல்வதைக் கைவிடுங்கள்.பொன்மொழிகள்