ரகசியம்
UPDATED : ஆக 30, 2024 | ADDED : ஆக 30, 2024
பலநாடுகளை கைப்பற்றிய அலெக்சாண்டரை சந்தித்தார் அறிஞர் ஒருவர். “பல நாட்டு மன்னர்கள் பலசாலியாக இருந்தும் அவர்களால் உங்களைப் போல வெற்றி பெற முடியவில்லையே... ஆனால் நீங்களோ வெற்றிகளைக் குவிக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்?” எனக் கேட்டார். “வெற்றியால் நான் ஆணவம் கொள்வதில்லை. தோற்ற மன்னர்களை எனக்கு சரிசமமாக நடத்துவேன். மக்கள் மீது புது வரிகளை திணிப்பதில்லை'' என்றதோடு பொன் நாணயங்களை பரிசாக கொடுத்தார்.