அனுபவம்
UPDATED : அக் 25, 2024 | ADDED : அக் 25, 2024
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க மரக்கட்டைகள் மிதந்து வந்தன. அதை அடுப்பு எரிக்க மக்கள் கரையில் சேகரித்தனர். அங்கிருந்த முதியவர் ஒருவர், 'வைரம் பாய்ந்த நல்ல மரங்களை விறகாக பயன்படுத்தக் கூடாது. அவை பல ஆண்டாக வளர்ந்த மரங்கள். அவற்றில் கதவு, ஜன்னல் செய்ய பயன்படுத்துங்கள்' என்றார். 'அனுபவம் மிக்கவர்களின் சொல் திராட்சை ரசத்திற்கு சமம்' என்கிறது தேவமொழி.