உள்ளூர் செய்திகள்

ஜாக்கிரதை

வீட்டில் இருந்து புறப்படும் போது, 'ஜாக்கிரதையாக போய் வா' என பெற்றோர் அறிவுரை சொல்வர். இதைப் போலவே மனிதர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்களை வரிசைப்படுத்துகிறது பைபிள்.1. ஆத்துமாவை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். 2. நினைப்பதை செயல்படுத்த முயற்சிக்கும் போது ஜாக்கிரதையாக இருங்கள். 3. சர்ச்சிற்கு கொடுக்க வேண்டியதை ஜாக்கிரதையாக கொடுங்கள். 4. ஜாக்கிரதை உள்ளவர்களின் கைகள் ஆட்சி செய்யும். 5. ஜாக்கிரதை உள்ளவரின் ஆத்மா பலமிக்கதாக இருக்கும். 6. ஜாக்கிரதையான செயல்கள் பணத்தை அடைய துணைநிற்கும். 7. வேலையில் ஜாக்கிரதை கொண்டவன் முன்னிலை வகிப்பான்.