உள்ளூர் செய்திகள்

நன்மைக்காக பயன்படுத்து

தெரு ஒன்றில் இயேசு சென்று கொண்டிருந்த போது, 'மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு' என ஒருவர் கேட்டார். ''மனிதர்கள் விரும்பியபடி உண்ணலாம். உடுத்தலாம். விரும்பிய இடத்தில் வசிக்கலாம். ஆனால் விலங்குகளுக்கு இது பொருந்தாது'' என்றார். மனிதர்களை தவிர மற்ற உயிர்களுக்கு சுதந்திரம் கிடையாது. ஆகவே சுதந்திரத்தை நன்மைக்காக பயன்படுத்து.