ஏழு கட்டளை
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
சிலுவையில் அறையப்பட்ட இயேசு சொன்ன வார்த்தைகள். மன்னிப்பு பிதாவே... அறியாமல் பாவம் செய்யும் இவர்களை மன்னியும். நீங்களும் பிறருடைய தவறை மன்னியுங்கள். ரட்சிப்பு துன்பத்தில் வருந்துவோரை மீட்டெடுத்து நல்வழிப்படுத்துங்கள். அரவணைப்பு குழந்தை மீது அன்பு காட்டும் தாயாக நீங்களும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டுங்கள். தத்தளிப்புபோலியான அன்பு, பாசம் காட்டி பிறரை மோசம் செய்யாதீர். யாரையும் தத்தளிக்க விடாதீர். ஆர்வம்நீங்கள் யார் என்பதை உணர்ந்து ஆர்வமுடன் செயலாற்றுங்கள். அர்ப்பணிப்பு அர்ப்பணிப்புடன் தொண்டு செய்து பொதுநலனில் ஈடுபடுங்கள். ஒப்புவிப்பு என் ஆவியை ஒப்படைக்கிறேன் என இயேசு உயிர் விட்டது போல உயிரை ஒப்படையுங்கள்.