உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

பா.யாழினி, கமலாநகர், டில்லி.*மகாலட்சுமிக்கு உரிய நேரம்...@விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடும் நேரம் மாலை. அந்நேரத்தில் சாப்பிடுதல், துாங்குதல் கெட்ட செயல்களில் ஈடுபடுதல் கூடாது. இந்நேரத்தில் வழிபடுவதை தவிர மற்றவற்றில் ஈடுபடுவது பாவம். க.மகேஷ், திருமங்கலம், மதுரை.*குழந்தைக்கு முதலில் தாய்வழி குலதெய்வத்திற்கு முடி எடுக்கலாமா...தந்தைவழி குலதெய்வத்திற்கு பின்னரே தாய்வழி குலதெய்வத்திற்கு முடி எடுக்கலாம். த.தேவராஜ், பேரூர், கோயம்புத்துார்.*கோயிலில் கண்டாமணி (பெரியமணி) ஒலிப்பது ஏன்?கடவுளை சிந்திக்காமல் வேண்டாத விஷயங்களில் மூழ்கியவர்களை எழுப்புவதே இதன் நோக்கம். மு.சிவநாதன், பசவன்குடி, பெங்களூரு. *போனில் சத்தமாக பேசுகிறார்களே....மற்றவரின் கவனத்தை ஈர்த்தல், தாழ்வு மனப்பான்மை, கேட்பதில் குறைபாடு இதில் ஏதேனும் ஒன்றே காரணம்.கு.பார்த்தசாரதி, வில்லியனுார், புதுச்சேரி.*ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுகளை என்ன செய்யலாம்?பூஜையறையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டால் ராம நாம வங்கிக்கு அனுப்புங்கள். மா.திவ்யா, நாகர்கோவில், கன்னியாகுமரி. *மனிதப் பிறவியின் நோக்கம் என்ன?கடவுளை உணர்தல், எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்தல்.வ.ரித்தேஷ், புரசைவாக்கம், சென்னை.*சன்னதிக்குள் ஒருவரை ஒருவர் மோதியபடி செல்வது சரியா?நாகரீகம் கொண்டவர்கள் மனிதர்கள். சன்னதிக்குச் செல்லும் குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு வழிவிட்டு வரிசையில் நின்று தரிசிக்கலாமே...கு.வெங்கடேஷ், பழநி, திண்டுக்கல். *கலியுகம் முற்றினால் என்னாகும்நல்லவர்கள் துன்பத்திற்கு ஆளாவர். மக்கள் கடமையை மறப்பர். இயற்கை சீற்றம் அதிகரிக்கும். அ.வைரவன், புளியரை, தென்காசி. *வீட்டில் இருந்து மூன்று பேராக வெளியே செல்லக் கூடாதா...சுபவிஷயமாக இருந்தால் மூன்று பேர் வேண்டாம். மற்றபடி தவறில்லை.