கேளுங்க சொல்கிறோம்
சா.சஞ்சனா, வண்டலுார், காஞ்சிபுரம்: கந்தசஷ்டி கவசம் என்றால்...போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. சொ.மீனாட்சி, திருமங்கலம், மதுரை: குழப்பம், பிரச்னை போக்கும் சிவத்தலத்தை சொல்லுங்கள். மதுரை, திருவண்ணாமலை வி.பகவதி, குமாரபுரம், கன்னியாகுமரி: மந்திரங்களை தினமும் எத்தனை முறை ஜபிக்கலாம்?ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ஆர்.கோவிந்த், பாகூர், புதுச்சேரி: கண் நோய் தீர...திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். பி.நித்தியா, கோயம்புத்துார்: வழக்கில் உள்ள பரம்பரை சொத்து கிடைக்க...சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். யா.பரத், உடன்குடி, துாத்துக்குடி: அடிக்கடி கனவில் யானை பிளிறுகிறது. நல்லதா... நல்லது. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுங்கள். சிவ.குருநாதன், உத்தமபாளையம், தேனி: மனைவி கர்ப்பமாக இருக்கும் போது என் முதல் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தலாமா?செலுத்தலாம். மு.ராம்சரண், நந்திமலை, பெங்களூரு: சிவன் கோயிலில் முப்பழ அபிஷேகம் எப்போது நடக்கும்?ஆனி பவுர்ணமியன்று மா, பலா, வாழைப்பழ(முப்பழம்) அபிஷேகம் சிவனுக்கு நடக்கும். இதை தரிசிப்பவருக்கு கேட்ட வரம் கிடைக்கும்.எம்.பார்வதி, எழும்பூர், சென்னை: மரணத்திற்கு பின் மனிதனை தொடர்வது எது?புண்ணியம், பாவம்.