கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
UPDATED : டிச 22, 2023 | ADDED : டிச 22, 2023
* கோ, புரம் என்னும் இரு சொற்கள் கோபுரம் என்று ஒரு சொல்லாக அமைந்துள்ளது.* கோ என்ற சொல்லிற்கு பசுக்கள், உயிர்கள், தலைவன் என்றும் பொருள். * 3, 5, 7, 9, 11 என்ற வாசல் எண்ணிக்கையில் கோபுரம் உருவாக்கப்படும்.* வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு நிரந்தரத்தலைவனாகிய கடவுளின் வீடு இது தான் என்பதை கோபுரங்கள் உணர்த்துகின்றன.* உயர்ந்த எண்ணங்கள் மனதில் உருவாவதற்கு கோபுரங்கள் மூலகாரணம். * கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது பழமொழி. * கோபுரம் மக்களுக்கு இடிதாங்கியாகவும் பயன்பட்டுள்ளன.* தானியங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கியாகவும் செயல்பட்டுள்ளன.* கோபுரம் ஹிந்து தத்துவத்தில் பிரம்ம எந்திர கபாலத்துாவர ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. * ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் 21 கோபுரங்கள் உள்ளன.