கேளுங்க சொல்கிறோம்
*வியாபாரம் செழிக்க எந்த நாளில் குலதெய்வத்தை வழிபட வேண்டும்?கே.பூமிகா, திருமாணிகுழி, கடலுார்.ஞாயிறன்று சூரிய ஹோரையில் (காலை 6:00 - 7:00 மணிக்குள்) வழிபட்டால் வியாபாரம் செழிக்கும். *வில்வக்காயை வீட்டில் வழிபடலாமா...எம்.கோபி, ஐ.டி.ஐ., பெங்களூரு.வில்வம் பழத்தை மகாலட்சுமியாக கருதி வீட்டில் வழிபடலாம். இதனால் பணத்தட்டுப்பாடு, கடன்பிரச்னை மறையும். *கோயிலில் உச்சிக்கால பூஜையை தரிசித்தால் என்ன கிடைக்கும்?கே.அருண், கீர்த்திநகர், டில்லி. நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் கிடைக்கும். *போலியான செயல்களை கவுரவத்திற்காக செய்கிறோமே சரியா...பி.ரஞ்சனி, சோழவந்தான், மதுரை.சரியில்லை. நேர்மையாக இருந்தால் உண்மையான கவுரவம் தேடி வரும் *துறவிகளை, 'பூஜ்யஸ்ரீ' என அழைப்பது ஏன்?எஸ்.அகிலேஷ், சமத்துார், கோயம்புத்துார்.பணம், புகழ், பட்டம், பதவி என ஆசைப்படாமல் வாழும் துறவியரை 'பூஜ்யஸ்ரீ' என அழைக்கிறோம். *ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும் என்கிறார்களே... வி.மீனாட்சி, கடையம், தென்காசி.நல்ல சொற்களால் நன்மையும், கெட்ட சொற்களால் தீமையும் உண்டாகும் என்பது இதன் பொருள். *வாஸ்து நேரத்தில் எப்போது பூமிபூஜை நடத்த வேண்டும்? சி.லதா, கோவிந்தவாடி, காஞ்சிபுரம்.வாஸ்து நேரம் 90 நிமிடம். அதை ஐந்தாகப் பிரித்து கடைசி பகுதியான 18 நிமிடத்தில் பூமி பூஜை நடத்த வேண்டும். *திருஷ்டி சுற்றுவது ஏன்?எஸ்.ரமணி, வடமதுரை, திண்டுக்கல். கெட்ட சக்திகளால் தீங்கு நேராமல் இருக்க திருஷ்டி சுற்றுகிறோம். *நெடுஞ்சாண் கிடை என்றால் என்ன?எல்.சரவணன், அருமனை, கன்னியாகுமரி.கோயிலில் வழிபாட்டிற்குப் பின், கொடி மரத்தின் முன் முழு உடம்பும் தரையில் படும்படி விழுந்து வணங்குவது நெடுஞ்சாண் கிடை.