உள்ளூர் செய்திகள்

எல்லாம் நல்லதாகவே நடக்கும்

* நல்ல மனம் கொண்டவர்களுக்கு, எல்லாம் நல்லதாகவே நடக்கும். * ஆணவத்தை கைவிட்டு ஆர்வமுடன் பணியில் ஈடுபடு. * உணவிலும், உடையிலும் எளிமையாக இரு. * மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணிங்களே.* நல்லதோ கெட்டதோ அவரவர்க்குரிய வினைப் பயனை அனுபவித்தே ஆக வேண்டும். * இன்ப துன்பம் மாறி மாறி வரும். ஆனால் யாருக்கும் நிலைத்திருப்பதில்லை. * உலகத்தின் உரிமையாளரான கடவுளைத் தவிர, வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. * சுவாசிப்பது மட்டுமல்ல, பிறருக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கை. * குறிக்கோள் உடையவர்கள் மங்காத புகழுடன் வாழ்வர்.* மனிதப்பிறவி மகத்தானது. நல்ல செயல்களை செய்து அதை பயன்படுத்திக்கொள். * துன்பத்தில் வருந்துபவர்களுக்கு உதவுவது உன் கடமை. * உண்மை எது என்பதை கண்டறிந்து செயல்படுவதே விவேகம். * யாரிடமும் சண்டையிடாதே. உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகிச்செல். * பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே.என்கிறார் ஷீரடி சாய்பாபா