பயமா...போயே போச்சு!
எதையும் தாங்கும் இதயம் பெற திருவாரூர் தியாகராஜரை நினைத்து பாடுங்கள். சுந்தரர் பாடிய தேவாரம் இது.இறைகளோடு இசைந்த இன்பம்இன்பத்தோடு இசைந்த வாழ்வுபறை கிழித்து அனைய போர்வைபற்றியான் நோக்கி னேற்குத்திறைகொணர்ந்து ஈண்டித் தேவர்செம்பொனும் மணியும் துாவிஅறைகழல் இறைஞ்சும் ஆரூர்அப்பனே அஞ்சினேனே.ஊன்மிசை உதிரக் குப்பைஒருபொருள் இலாத மாயம்மான்மறித்து அனைய நோக்கின்மடந்தைமார் மதிக்கும் இந்தமானுடப் பிறவி வாழ்வுவாழ்வதோர் வாழ்வு வேண்டேன்ஆனல் வெள்ளேற்ற ஆரூர்அப்பனே அஞ்சினேனே.அறுபதும் பத்தும் எட்டும்ஆறினோடு அஞ்சும் நான்கும்துறுபறித்து அனைய நோக்கிச்சொல்லிற்று ஒன்றாகச் சொல்லார்நறுமலர்ப் பூவும் நீரும்நாள்தொறும் வணங்குவாருக்குஅறிவினைக் கொடுக்கும் ஆரூர்அப்பனே அஞ்சினேனே.சொல்லிடில் எல்லை யில்லைசுவையிலாப் பேதை வாழ்வுநல்லதோர் கூரை புக்குநலமிக அறிந்தேன் அல்லேன்மல்லிகை மாட நீடுமருங்கொடு நெருங்கி எங்கும்அல்லிவண்டு இயங்கும் ஆரூர்அப்பனே அஞ்சினேனே.நரம்பினோடு எலும்பு கட்டிநசையினோடு இசைஒன்று இல்லாக்குரம்பைவாய்க் குடியிருந்துகுலத்தினால் வாழ மாட்டேன்விரும்பியே கமழும் புன்னைமாதவித் தொகுதி என்றும்அரும்புவாய் மலரும் ஆரூர்அப்பனே அஞ்சினேனே.மணமென மகிழ்வர் முன்னேமக்கள்தாய் தந்தை சுற்றம்பிணமெனச் சுடுவர் பேர்த்தேபிறவியை வேண்டேன் நாயேன்பணையிடைச் சோலை தோறும்பைம்பொழில் விளாகத்து எங்கள்அணைவினைக் கொடுக்கும் ஆரூர்அப்பனே அஞ்சினேனே.தாழ்வெனும் தன்மை விட்டுத்தனத்தையே மனத்தில் வைத்துவாழ்வதே கருதித் தொண்டர்மறுமைக்குஒன்று ஈயகில்லார்ஆழ்குழிப் பட்ட போதுஅலக்கணில் ஒருவர்க்கு ஆவர்யாழ்முயன்று இருக்கும் ஆரூர்அப்பனே அஞ்சினேனே.உதிரநீர் இறைச்சிக் குப்பைஎடுத்தது மலக்கு கைம்மேல்வருவதோர் மாயக் கூரைவாழ்வதோர் வாழ்வு வேண்டேன்கரியமால் அயனும் தேடிக்கழலிணைக் காண மாட்டாஅரியனாய் நின்ற ஆரூர்அப்பனே அஞ்சினேனே.பொய்த் தன்மைத் தாய மாயப்போர்வையை மெய்யென்று எண்ணும்வித்தகத் தாய வாழ்வுவேண்டிநான் விரும்பகில்லேன்முத்தினைத் தொழுது நாளும்முடிகளால் வணங்குவாருக்கு அத்தன்மைத்தாகும் ஆரூர்அப்பனே அஞ்சினேனே.தஞ்சொலால் அருள் பயக்கும்தமியனேன் தடமுலைக்கண்அஞ்சொலார் பயிலும் ஆரூர்அப்பனை ஊரன் அஞ்சிச்செஞ்சொலால் நயந்த பாடல்சிந்தியா ஏத்த வல்லார்நஞ்சுலாம் கண்டத்து எங்கள்நாதனை நண்ணுவாரே.