வந்தாள் மகாலட்சுமியே! என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே!!
UPDATED : ஏப் 24, 2020 | ADDED : ஏப் 24, 2020
அட்சய திரிதியை நாளில் பாரதியார் பக்திப் பாடல்களைப் பாடுங்கள்மலரின் மேவு திருவே! உன் மேல்யைல் பொங்கி நின்றேன்;நிலவு செய்யும் முகமும்காண்பார்நினைவ ழிக்கும் விழியும்,கலக லென்ற மொழியும்தெய்வக்களிது லங்கு நகையும்,இலகு செல்வ வடிவும்கண்டுன்இன்பம் வேண்டு கின்றேன்கமல மேவு திருவே!நின்மேல்காதலாகி நின்றேன்.குமரி நின்னை இங்கேபெற்றோர்கோடி யின்ப முற்றார்;அமரர் போல வாழ்வேன்,என்மேல்அன்பு கொள்வை யாயின்இமமய வெற்பின் மோத,நின்மேல்இசைகள் பாடி வாழ்வேன்.வாணி தன்னை என்றும்நினதுவரிசை பாட வைப்பேன்!நாணி யேக லாமோ?என்னைநன்க றிந்தி லாயோ?பேணி வைய மெல்லாம்நன்மைபெருக வைக்கும் விரதம்பூணு மைந்த ரெல்லாம்கண்ணன்பொறிக ளாவ ரன்றோ?பொன்னும் நல்ல மணியும்சுடர்செய்பூண்க ளேந்தி வந்தாய்!மின்னு நின்தன் வடிவிற்பணிகள்மேவி நிற்கும் அழகைஎன்னு ரைப்ப னேடீ!திருவே!என்னு யிக்கொ ரமுதே!நின்னை மார்பு சேரத்தழுவிநிக ரிலாது வாழ்வேன்.செல்வ மெட்டு மெய்திநின்னாற்செம்மை யேறி வாழ்வேன்;இல்லை என்ற கொடுமைஉலகில்இல்லை யாக வைப்பேன்;முல்லை போன்ற முறுவல்காட்டிமோக வாதை நீக்கி,எல்லை யற்ற சுவையே!எனை நீஎன்றும் வாழ வைப்பாய்.மாதவன் சக்தியினைச் செய்யமலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்;போதுமிவ் வறுமையெலாம்எந்தப்போதிலுஞ் சிறுமையின் புகைதனிலேவேதனைப் படுமனமும்உயர்வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்வாதனை பொறுக்கவில்லைஅன்னைமாமக ளடியிணை சரண் புகுவோம்.கீழ்களின் அவமதிப்பும்தொழில்கெட்டவ னிணக்கமும் கிணற்றினுள்ளேமூழ்கிய விளக்கினைப் போல்செய்யும்முயற்சியெல் லாங்கெட்ட முடிவதுவும்,ஏழ்கட லோடியுமோர்பயன்எய்திட வழியின்றி இருப்பதுவும்,வீழ்கஇக்கொடு நோய்தான்வையமீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ?பாற்கட லிடைப் பிறந்தாள்அதுபயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்;ஏற்குமோர் தாமரைப்பூஅதில்இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;நாற்கரந் தானுடையாள்அந்தநான்கினும் பலவகைத் திருவுடையாள்;வேற்கரு விழியுடையாள்செய்யமேனியள் பசுமையை விரும்பிடுவாள்.நாரணன் மார்பினிலேஅன்புநலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;தோரணப் பந்தரிலும்பசுத்தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,வீரர்தந் தோளினிலும்உடல்வெயர்திட உழைப்பவர் தொழில்களிலம்பாரதி சிரத்தினிலும்ஒளிபரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.பொன்னிலும் மணிகளிலும் நறும்பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,கன்னியர் நகைப்பினிலும்செழுங்காட்டிலும் பொழிலிலம் கழனியிலம்,முன்னிய தணிவினிலும்மன்னர்முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்பன்னிநற் புகழ்பாடிஅவள்பதமலர் வாழ்த்திநற் பதம்பெறு வோம்.மண்ணினுட் கனிகளிலும்மலைவாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,புண்ணிய வேள்வியிலும்உயர்புகழிலும் மதியிலும் புதுமையிலும்பண்ணுநற் பாவையிலும்நல்லபாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்,நண்ணிய தேவிதனைஎங்கள்நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.வெற்றிகொள் படையினிலும்பலவிநயங்கள் அறிந்தவர் கடையினிலும்நற்றவ நடையினிலும்நல்நாவலர் தேமொழித் தொடரினிலும்,உற்றசெந் திருத்தாயைநித்தம்உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;கற்றபல் கலைகளெல்லாம்அவள்கருணை நல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.