மனப்பாடப்பகுதி
UPDATED : டிச 24, 2010 | ADDED : டிச 24, 2010
நீரும் மலரும் நிலவும் சடையில்ஊரும் அரவம் உடையான் இடமாம்வாரும் அருவி மணிபொன் கொழித்துச்சேரும் நறையூர் சித்தீச் சரமே.பொருள்: கங்கை நீரும், கொன்றைமலரும், இளம்பிறையும் அணிந்த சடையனே! அசைந்தாடும் பாம்பினை கழுத்தில் அணிந்தவனே! வழிந்தோடும் அருவிநீரில் நவமணிகள் பரவிக் கிடக்க, வளம் கொழிக்கும் சித்தீச்சரம் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனே! உன்னைப் போற்றுகின்றேன். குறிப்பு: கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகிலுள்ள திருநறையூர் சிவன் கோயிலே சித்தீச்சரம் என்ற புராணப்பெயர் பெற்றுள்ளது.