மனப்பாடப்பகுதி!
UPDATED : டிச 23, 2014 | ADDED : டிச 23, 2014
அரிஹர புத்ரனை ஆனந்த ரூபனைஇருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியைசபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனைதினம் தினம் போற்றிப் பணிந்திடுவோமே.பொருள்: சிவனுக்கும், திருமாலுக்கும் (மோகினி) பிள்ளையாக வந்தவனே! ஆனந்த வடிவானவனே! இருமூர்த்தி மைந்தனே! முருகப்பெருமானின் தம்பியே! சபரிமலையில் வாழ்பவனே! சாந்த வடிவானவனே! தினமும் உன் திருவடியைப் போற்றிப் பணிகிறோம்.