உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்துமின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனேமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமேஅன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.பொருள்: தங்கநிறம் கொண்டவனே! புலித்தோல் ஆடை உடுத்தியவனே! சிவந்த சடை மீது அழகு பொங்கும் கொன்றை மாலையைச் சூடியவனே! நிலையானவனே! நவமணியாக விளங்குபவனே! திருமழபாடியில் வீற்றிருக்கும் மாணிக்கமே! தாயானவனே! உன்னைத் தவிர வேறு யாரை நான் வழிபடுவேன்?குறிப்பு: அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாதர் குறித்து, சுந்தரர் தேவாரத்தில் பாடியது.