மனப்பாடப்பகுதி!
UPDATED : ஜூலை 01, 2015 | ADDED : ஜூலை 01, 2015
அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளிநன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும்நின்றார வேத்து நிறைகழலோன் புனைகொன்றைப்பொன்றாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ.பொருள்: ''ஆலமரத்தின் அடியில் எழுந்தருளியவரே! அரிய மறைகளை வானவர்களுக்கும், முனிவர் நால்வருக்கும் உபதேசித்தவரே! கழல் அணிந்த பாதமும், கொன்றை மலர் மாலையும் கொண்டவரே!'' என்று தட்சிணாமூர்த்தியின் புகழைப் பாடியபடியே பூஜைக்குரிய பூக்களைப் பறிப்போம்.குறிப்பு: மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப்பாடல்