உள்ளூர் செய்திகள்

முருகன் 41

முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும் தெரிந்து கொள்வோம்.1. முருகன் - அழகன்.2. பிள்ளையார் - சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.3. சித்தன் - அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.4. சேயோன் - செந்நிறம் உடையவன்.5. வேள் - எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் <உடையவன்.6. வேலன் - வெற்றி தரும் வேலை உடையவன். அரன் மகன் - சிவனின் புத்திரன்.7. அறுமீன் காதலன் - கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.8. அறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.9. குரு - சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் <உரைத்தவன்.10. கோழிக்கொடியோன் - சேவலைக் கொடியாக உடையவன்.11. கங்கை மைந்தன் - தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.12. கடம்பன் - கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.13. கந்தன் - வலிமையான தோள்களை உ<டையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன். 14. காங்கேயன் - கங்கை மைந்தன்15. கார்த்திகேயன் - கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.16. குகன் - மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.17. குமரன் - சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.18. குழகன் - அழகன், இளமையானவன்.19. குறிஞ்சி வேந்தன் - மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.20. குன்றெறிந்தோன் - கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.21. கவுரி நந்தனன் - உமாதேவியின் மைந்தன்.22. சண்முகன் - ஆறு முகம் கொண்டவன்.23. சரவணபவன் - நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.24. சிலம்பன் - காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.25. சுரேசன் - துன்பம் நீக்குபவன்.26. சூர்ப்பகைவன் - எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.27. செட்டி - உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.28. சேந்தன் - சிவப்பு நிறமுடையவன்29. சேவற்கொடியோன் - சேவலைக் கொடியில் தாங்கியவன்.30. தெய்வானை காந்தன் - தெய்வானையின் கணவன்.31. தேவசேனாபதி - சேனைக்குத் தலைவன்.32. பாவகி, பாவகாத்மஜன் - பரிசுத்தம் உடையவன்.33. மஞ்ஞையூர்தி - மயிலை வாகனமாகக் கொண்டவன்.34. மாயோன் மருகன் - திருமாலின் மருமகன்.35. வள்ளி மணாளன் - வள்ளியின் கணவன்.36. பாகுலேயன் - கார்த்திகேயன்.37. விசாகன் - வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.38. சங்கத்தலைவன் - கலைகளை உணர்ந்த புலவன்.39. சாமி - செல்வன்.40. முத்தையன் - முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.41. சுப்பிரமணியன் - வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.