நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 218 - பெரியாழ்வார் பாடுகிறார்
UPDATED : டிச 31, 2010 | ADDED : டிச 31, 2010
அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னைமிடைந்து இட்டு மந்தரம் மத்தாக நாட்டி!வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக்கடைந்து இட்ட கைகளால் சப்பாணிகார்முகில் வண்ணனே! சப்பாணிபொருள்: ஆழமான பாற்கடலில் தேவர்கள் மந்தரமலையை மத்தாக நாட்டினர். வாசுகி பாம்பினைக் கயிறாகச் சுற்றிக் கடைந்தனர். அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை பகிர்ந்து கொடுத்த கண்ணனே! கரியமேகம் போன்ற நிறம் கொண்டவனே! உன் கைகளால் சப்பாணி கொட்டுவாயாக.