மாணவர்களுக்கு ஞாபகசக்தி தேவை - சொல்கிறார் சிவானந்தர்
* பகுத்தறிவு இல்லாத விலங்குகள் கூட தங்கள் வாழ்க்கை முறைகளை இஷ்டம் போல மாற்றிக் கொள்வதில்லை. ஆனால், மனிதன் மனம் போன போக்கில் நடந்து அமைதியை இழந்து வாழ்கிறான்.* நவீன வாழ்க்கை முறை மனிதனை நாகரிகம் என்றபெயரில் கட்டுப்பாடில்லாமல் வாழ வகுத்துவிட்டது. பண்பாடு என்பது காலத்திற்கு காலம் மாறுவதில்லை. * வாழ்க்கையில் வெற்றி பெற நினைவாற்றல் மிகவும் அவசியம். ஞாபகமறதி குணம் கொண்டவர்கள் நிறைய தவறுகளைச் செய்வார்கள். ஞாபகத்திறனை வளர்த்துக் கொண்டால் ஆன்மிக வாழ்விலும் சாதிக்க முடியும்.* நம்முடைய உள்மனம் தான் ஞாபகசக்திக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களின் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* புலனடக்கத்தையும், உணவில் கட்டுப்பாட்டையும் பின் பற்றினால் நினைவாற்றல் பெருகும். ஆற்றலை வீணாக்கும் வேண்டாத பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது அவசியம்.* நாம் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் ஆர்வமுடன் பணியாற்றவேண்டும். தியானப்பயிற்சி, மவுனவிரதம் ஆகியவை ஞாபகத்திறனை மேம்படுத்தும்.* நல்லவிஷயங்கள் எங்கிருந்தாலும் நாடிச் செல்லுங்கள். அவற்றை மனதில் நிலைநிறுத்துங்கள். இறையுணர்வில் ஈடுபாடு கொண்டு வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்.