சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* கோயில்களில் நடன கோலத்தில் லட்சுமி சிலை அமைத்தவர் கர்நாடக மன்னர்களான ஹோய்சாளர்கள்.* ஆந்திராவின் அஹோபிலத்தில் செஞ்சுலட்சுமி என்னும் பெயரில் வேடுவப்பெண்ணாக லட்சுமி காட்சியளிக்கிறாள். * சாளக்கிரம கல்லினால் ஆன மகாலட்சுமியை பத்ரிநாத் கோயிலில் தரிசிக்கலாம். * மென்மையும், நளினமும் கொண்டவள் என்பதால் மகாலட்சுமிக்கு 'மலர் மகள்' என்று பெயர். * தீயில் இருந்து மகாலட்சுமி அவதரித்ததாக ஆனந்த ராமாயணம் சொல்கிறது. * பாற்கடலில் லட்சுமியுடன் பிறந்த தேவலோக யானை ஐராவதம்.* வில்வ மரத்தில் லட்சுமி வீற்றிருப்பதாக காளிகா புராணம் சொல்கிறது. * லட்சுமி அம்சமான வில்வ மரத்தை 'ஸ்ரீவிருட்சம்' என்று அழைப்பர். * ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடியதால் மகாலட்சுமி பொன்மழை பெய்யச் செய்தாள். * ரிக்வேதம் செல்வத்தின் அதிபதியாக லட்சுமி குபேரனை குறிப்பிடுகிறது. * நவக்கிரகங்களில் லட்சுமியின் சகோதரராக கருதப்படுபவர் சந்திரன். * மகாலட்சுமி மீது ஸ்ரீஸ்துதி பாடிய அருளாளர் வேதாந்த தேசிகன்.