உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஆதிசங்கரர். அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார். * மனித வாழ்வு உள்ள வரையில் ஆசை, துன்பம் உண்டு. இவற்றில் இருந்து விடுபடுவதே மோட்சம். * சிலர் புண்ணியம் செய்ய விரும்பினாலும் அதை செய்வதில்லை. பலரும் பாவத்தை செய்தாலும் பாவி என்ற பெயரை மட்டும் விரும்புவதில்லை. * தர்ம சாஸ்திரங்களை எடுத்துச் சொல்வதோடு தானும் பின்பற்றுபவரே சிறந்த குருநாதர். * மந்திரத்தை மனதில் நிறுத்தி திரும்பத் திரும்ப சொல்வதால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். இதை 'உருவேற திரு ஏறும்' என்பர். இதையே 'மனனாத் த்ராயதே' என்கிறது வேதம். * வேதத்தில் ஆறு அங்கம் உள்ளன. அதில் ஒன்று ஜோதிடம். இதை வேதத்தின் கண் என அழைக்கிறோம். நல்ல காலத்தை நிர்ணயம் செய்து ஒரு விஷயத்திற்கு ஜோதிடம் நம்மை அழைத்துச் செல்வதால், இதற்கு 'நயனம்' (கண்)என்ற பெயரும் உண்டு. * 'ஸப்தாச்வன்' என்று சூரிய பகவானுக்கு பெயர் உண்டு. இதற்கு தேரில் ஏழு (ஸப்த) குதிரைகளை (அச்வம்) கொண்டவர் என்பது அர்த்தம்.* பதின்மூன்று எழுத்துக்களை கொண்ட 'ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்னும் மந்திரத்தை எப்போதும் ஜபித்துக் கொண்டிருப்பவர் ஆஞ்சநேயர்.