இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜூலை 24, 2020 | ADDED : ஜூலை 24, 2020
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:(வேதாந்த தேசிகனின் கோதாஸ்துதி பாடல்)பொருள்: ஆண்டாளே! சாஸ்திரம் அனுமதிக்காத செயல்களைச் செய்தும், எங்களுக்கு தங்கள் கணவரான ரங்கநாதர் அருள்புரிகிறார். காரணம் என்னவாக இருக்கும்? நீ சூடிக்கொடுத்த மாலையால் அவர் வசப்பட்டிருப்பது தான். அதோடு வீணை இசை போன்ற இனிய குரலால் தமிழில் பாசுரமும் பாடியிருக்கிறாய். அதனால் உன் பிள்ளைகளாகிய எங்களைத் தண்டிக்காமல் இருக்கிறார். அதற்காக உனக்கு எங்கள் வணக்கத்தை தெரிவிக்கிறோம்.