உள்ளூர் செய்திகள்

பகவத்கீதையும் திருக்குறளும் - 24

மனதில் உறுதி வேண்டும்உள்ளாட்சி தேர்தலில் ராமசாமி தாத்தா வெற்றி பெற்றதற்கு,'' வாழ்த்துக்கள் தாத்தா. மக்களுக்கு என்ன செய்யப் போறீங்க?'' எனக் கேட்டான் கந்தன். ''மக்களை நல்வழிப்படுத்த தியான வகுப்பு ஆரம்பிக்க போகிறேன்'' என்றார். அதைக் கேட்டு சிரித்த கந்தன், '' மக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தானே சொல்வார்கள். நீங்க என்னவோ தியான வகுப்பு நடத்துவேன்னு சொல்றீங்களே...'' என்றான். ''மனஉறுதியின் அவசியம் பற்றி பகவத்கீதை, திருக்குறளில் என்ன சொல்லியிருக்குன்னு நாம் பார்த்தால் இதன் மகத்துவம் தெரியும்'' என்றார் தாத்தா. '' நல்லா சொல்லுங்க தாத்தா'' பகவத்கீதையின் ஆறாம் அத்தியாயம் 36ம் ஸ்லோகத்தில்அஸம்யதாத்மநா யோகோ³ து³ஷ்ப்ராப இதி மே மதி:|வஸ்²யாத்மநா து யததா ஸ²க்யோ5வாப்துமுபாயத: ||6-36||மனதை வசப்படுத்த முடியாதவன் கர்ம யோகியாகவோ, பக்தி யோகியாகவோ இருக்க முடியாது. மனதை வசப்படுத்தியவன் விடாமுயற்சியுடன் வெற்றி அடைந்தே தீர்வான். மனதை வசப்படுத்தினால் எந்த செயலையும் திறம்பட செய்ய முடியும் என்கிறார் பகவான் கிருஷ்ணர். அதையே திருவள்ளுவர் 662வது குறளில் ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். ஒரு செயலில் குறுக்கிடும் இடையூறுகளை தடுக்கவும், ஒருவேளை இடையூறு வந்தாலும் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பவனே மனஉறுதி கொண்டவன். அதனால் தான் தியான வகுப்பு நடத்த விரும்புகிறேன்'' என்றார். ''நான் தான் அதில் பங்கேற்கும் முதல் மாணவன்'' என்றான் கந்தன். --தொடரும்எல்.ராதிகா97894 50554