சிவத்துளி... ஜீவத்துளி...
UPDATED : பிப் 09, 2018 | ADDED : பிப் 09, 2018
* சிவன் என்ற சொல்லுக்கு மந்திரம் அல்லது மங்களம் என்று பொருள்.* ஜீவனும் (மனிதன்) சிவனாக முடியும். ஆசைகளை வேரறுத்தால் இந்த நிலையை அடையலாம்.* சிவபக்தனின் சின்னம் திருநீறு. சாம்பல் போன்ற இது. மனித வாழ்வின் நிலையாமையை குறிக்கிறது.* சிவலிங்கம் என்பது சிவனின் ஜோதி வடிவம். மேலுள்ள பாணம் ஆணையும், கீழுள்ள ஆவுடையார் (பீடம்) பெண்ணையும் குறிக்கும். இதுவே உலகைப் படைக்கும் வடிவம்.* சிவனை 'திரியம்பகன்' என்பர். 'அம்பகம்' என்றால் 'கண்'. சிவனுக்கு அக்னி, சூரியன், சந்திரன் என்ற மூன்று கண்கள் உண்டு.* 'பிரதோஷம்' என்ற சொல்லுக்கு 'இரவுக்கு முந்தைய நேரம்' எனப்பொருள்.* பாற்கடலை கடைந்த தினம் சனிக்கிழமை என்பதால், சனி பிரதோஷம் முக்கியத்துவம் பெறுகிறது.* வானம் நமக்கு தந்தை, பூமி நமக்கு அன்னை. இதற்கு அதிபதி சிவன். எனவே அவரை 'அர்த்தநாரீஸ்வரர்' என்பர்.