உள்ளூர் செய்திகள்

எல்லாம் கடவுளின் செயல்

பிப்.5 - ஸித்தி தினம்* எல்லாம் கடவுளின் செயல் என்று அறிந்தால் துன்பம் வராது. * பறவைகளை கூண்டில் அடைத்து அவற்றை துன்புறுத்தாதே. * நீ செய்த புண்ணியத்தால் உனக்கு மனித பிறவி கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்து. * நல்லவர்களின் மனதை புண்படுத்தாதே. * உண்மையை பேசு. உனது வார்த்தைக்கு மதிப்பு கூடும். * ஜாதி, மதம், நாடு என யாரையும் பிரித்துப் பார்க்காதே. * அன்பு, இரக்கத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தால் கடவுள் உனக்கு அருள்புரிவார். * மரங்களை அழிக்காதே. * மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றும் இணைந்த நிலையில் கடவுளை வழிபடு. * எப்போதும் பொதுநோக்கத்துடன் செயல்படு. * நல்லதை பேசி புண்ணியத்தை தேடு. * பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லாதே. * 'எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்' என கடவுளிடம் வேண்டிக்கொள். * பசியால் துன்பப்படும் உயிர்களுக்கு உணவு கொடு. இதுவே தர்மத்தில் சிறந்தது. * பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் நபர்களுடன் நட்பு கொள்ளாதே. என்கிறார் வள்ளலார்