மாடிவீட்டு மகாகாளி
கேரள மாநிலம் குமுளியின் காவல் தெய்வமான காளியை 'மாடிவீட்டு மகாகாளி' என அழைக்கின்றனர். வெள்ளிக் கிழமையன்று இக்கோயிலில் நடக்கும் குருதி பூஜையில் பங்கேற்றால் குறைகள் தீரும். சில நுாற்றாண்டுக்கு முன்பு கேரள, தமிழக பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இப்பகுதியில் தங்கி பணிபுரிந்தனர். விலங்குகள் நடமாட்டம் இருந்ததால் வனதெய்வமான காளியம்மனை வழிபட்டனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமான இப்பகுதிக்கு ஒருநாள் வேட்டையாட மன்னர் வந்தார். பயணக் களைப்பால் வருந்திய மன்னருக்கு மேய்ச்சலுக்காக நின்ற பக்தர் ஒருவர் குடிக்க தண்ணீரும், பாலும் கொடுத்து உபசரித்தார். மகிழ்ந்த மன்னர் இப்பகுதியை தானமாக பக்தருக்கு வழங்கினார். அதன்பின் துர்கா கணபதி பத்ரகாளி கோயில் இங்கு கட்டப்பட்டது. முதல் தளத்தில் கருவறை உள்ளது. தரை தளத்தில் வரகு, நவரத்தினம், யந்திரம் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு 'சடாதார பிரதிஷ்டை' என பெயர். 1980ல் சிவன்(மகாதேவன்) சன்னதி கட்டப்பட்டது. ஆறுகால பூஜை நடக்கும் இக்கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு உலக நன்மைக்காக கணபதி ேஹாமம் நடக்கிறது. தொழில் தொடங்குபவர்கள் இதில் பங்கேற்கின்றனர். அப்போது நெய் அவல் பிரசாதம் விநாயகருக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமையன்று இரவு 8:00 மணிக்கு நடக்கும் குருதி பூஜையில் தரப்படும் தீர்த்தத்தை வீட்டில் தெளித்தால் பயம், திருஷ்டி, கிரக தோஷம் விலகும். சபரிமலை செல்லும் பக்தர்கள் இக்கோயிலில் தங்கி வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ராமாயண மாதம் எனப்படும் ஆடியில் ராமாயண பாராயணம் நடக்கிறது. விண்ணேறிப்பாறையின் உச்சியிலுள்ள மங்கலதேவி கண்ணகிக்கு சித்ராபவுர்ணமியன்று மட்டும் பூஜை, அன்னதானம் நடக்கிறது. திருப்பணி நடக்கும் இக்கோயிலில் கும்பாபிேஷகம் விரைவில் நடக்க உள்ளது.எப்படி செல்வது: மதுரையில் இருந்து கம்பம் வழியாக 130 கி.மீ.,விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி மாசி மாதம் கும்பம் பூரத் திருவிழாநேரம்: அதிகாலை 5:30 - 11:00 மணி: மாலை 5:30 - 8:00 மணிதொடர்புக்கு: 85478 54437, 94958 39237அருகிலுள்ள தலம்: தேக்கடி தேவி கோயில் (1கி.மீ.,)நேரம்: அதிகாலை 5:30 - 9:30 மணி: மாலை 5:00 - 7:30 மணிதொடர்புக்கு: 94473 89736, 99953 02059