உள்ளூர் செய்திகள்

ஒன்று எங்கள் ஜாதியே!

* கடவுளின் பிள்ளைகளான நாம் அனைவரும் ஒரே குலம். இதில் ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது.* செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே நிலையானவர்.* நற்குணம் கொண்டவர்கள் கர்வம் கொள்ள வேண்டாம். உங்களை விட நல்லவர்கள் உலகில் இருக்கிறார்கள்.* பிறரை இழிவாக கருதுபவன், தன் நிலையில் இருந்து தாழ்ந்து வருந்த நேரிடும்.* அறிவாளிக்கு பிறர் மீது பொறாமையோ, பொருள் ஆசையோ ஏற்படாது. * பிறரது குறையை சிந்திப்பவன் பாவி. தன்னை உணர்ந்து மகிழ்பவன் ஞானி.* பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தர்மம் செய்யக்கூடாது. மனித நேயத்துடன் உதவ வேண்டும். * கடவுளை பற்றிக் கொண்டால் வாழ்வில் வெற்றி உறுதி.* பொன், மண், பெண், புகழ் ஆசைகளில் சிக்கியவர்கள் அதிலிருந்து எளிதில் மீள முடியாது.ஒன்றுபடுத்துகிறார் சாந்தானந்தர்