லட்சியத்தை நோக்கி ஓடு
* ஆற்றுநீர் போல உனது லட்சியத்தை நோக்கி ஓடு. * எப்போதும் விடாமுயற்சி செய். நீயும் அறிஞனாகலாம். * நல்லவரோடு நட்பு கொள். உன் வாழ்வு பிரகாசமாகும். * எதையும் கூச்சப்படாமல் கற்றுக்கொள். வாழ்க்கையில் முன்னேறலாம். * மனதில் நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம். * பிறருக்கு அடிமையாக வாழாதே. * நன்றாக படி. அதுவே உன்னை காப்பாற்றும். * உனது உழைப்பால் வரும் பணமே சிறந்தது. * உன் கஷ்டத்திலும் பங்கெடுப்பவர்களே நல்ல உறவினர்கள். * கடவுள் அருள் இல்லாமல் உன்னால் எதையும் செய்ய முடியாது. * பெரியவர்கள் கோபப்பட்டால் அதில் அர்த்தம் இருக்கும். * எதிலும் தயக்கம் கொள்ளாதே.* பிறர் தயவில் வாழாதே.* உனது கஷ்டத்திலும் உதவி செய்பவனே நல்ல நண்பன். * ஒருவர் செய்த உதவியை மறக்காதே. * பொய் பேசினால் பிரச்னையில் சிக்குவாய். * நீ உயர்வதும், தாழ்வதும் உனது பேச்சில்தான் உள்ளது. நம்பிக்கை தருகிறார் சாணக்கியர்