உள்ளூர் செய்திகள்

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்

ஆகஸ்ட் 14 பிறந்த நாள் * எதற்கும் உணர்ச்சிவசப்படாதே. கோபப்படாதே. மீறினால் அறிவை இழப்பாய். * கடமையை சரியாகச் செய். அப்போதுதான் கடவுள் மீது துாய பக்தி செலுத்த முடியும். * நான் யார் என்பதற்கு விடை தேடு. உண்மைகள் புரியும். * நல்ல செயல்களில் ஈடுபடுவதால் கிடைக்கும் நிறைவே உண்மையான மகிழ்ச்சி. * உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என இருப்பவரே உத்தமர்.* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.* மனம் என்பது விளைநிலம். அதில் நல்ல எண்ணம் என்னும் விதையை விதையுங்கள். * மனதில் உருவாகும் ஒழுங்கற்ற எண்ணமே உனக்கு உண்மையான எதிரி.* ஆசையை அடியோடு ஒழிக்க முடியாது. அதை ஒழுங்குப்படுத்து. * எந்த நிலையிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால், அவர் ஞானம் பெற்றுவிட்டார். * கற்பு என்பது உயிரினும் மேலான ஒழுக்கம். * ஆண், பெண் ஒழுக்கத்தை பாதுகாக்கும் கவசமே திருமணம்.* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்லாதே. மீறினால் அமைதி இருக்காது. * தவறு செய்வது இயல்பே. அதை திருத்திக்கொள். என்கிறார் வேதாத்ரி