இதுதான் வாழ்க்கை
* ஆயுள் தேயும். ஆசையோ வளரும். இதுதான் வாழ்க்கை. * மனதுடன் நடத்தும் போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. * உடலில் மூச்சுள்ள வரையில் மட்டுமே உங்களுக்கு மரியாதை இருக்கும். * பிறருக்காக நீங்கள் அழலாம். ஆனால் அவருக்காக நீங்கள் சாப்பிட முடியுமா?* மனதை அடக்குகின்ற வழிமுறைகளையே சாஸ்திரங்கள், ஞான நுால்கள் எடுத்துரைக்கின்றன. * முதுமை வந்ததும் ஆசை அடங்கிவிடும். செல்வம் சுருங்கியதும் சுற்றம் கலைந்துவிடும். * உலகம் விசித்திரமானது. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என உங்களுக்கே தெரியாது. * பிறப்பும், அடுத்து நடப்பதும் உங்கள் கையில் இல்லை. * உருவமற்ற நமது மனம் பெரிய உருவம் படைத்த நம்மை ஆட்டிப்படைக்கிறது.* 'நமசிவாய' என்னும் ஐந்து எழுத்துக்களும் சிவபெருமானே. * ஆசைகளை அதிகப்படுத்தினால் துன்பத்தை அனுபவிக்க நேரிடும். * மானிடப்பிறவி அரிதினும் அரிது. அந்தணராகப் பிறப்பது அதனினும் அரிது. * நதியானது கடலில் கலக்கும். அதுபோல் கடவுளை பிடித்துக்கொள்ளுங்கள். * முருகப்பெருமானே வேதத்தின் உட்பொருளாக இருந்து உலகை காத்து வருகிறார். * தன்னை வழிபடுவோரின் துயரத்தை உடனே போக்குபவர் விநாயகர். * பகவத் கீதையை படியுங்கள். கங்கை நீரை அருந்துங்கள். தெளிவுபடுத்துகிறார் ஆதிசங்கரர்