உள்ளூர் செய்திகள்

நினைத்தது கைகூடும்

* மனம் கடவுளிடம் ஒன்றி விட்டால் நினைத்தது கைகூடும். * கடவுள் எப்போதும் உன் அருகிலேயே இருக்கிறார். * துன்பம் என்பது கடவுள் உனக்கு அளிக்கும் வாய்ப்பு. * நம்பிக்கையுடன் செயல்படு. முயற்சியில் வெற்றி பெறுவாய். * கடவுளிடம் உதவி கேள். நிச்சயம் அவர் செய்வார். * 'போதும்' என்ற மனதுடன் செயல்படு. மகிழ்ச்சியாக இருப்பாய். * பக்தி இருந்தால் முடியாததையும் முடிக்க முடியும். * கோபப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது பெண்களுக்கு அழகு. * நல்ல செயலில் ஈடுபடு. பாவம் குறையும். * பிறர் மீது குற்றம் சொல்லாதே. மீறி சொன்னால் அதுவே இயல்பாகிவிடும். * நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடவுளின் நாமத்தை சொல்லு. * முயற்சியும், உழைப்பும் இருந்தால் மட்டுமே வாழ்வில் உயர முடியும். * சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படு. தீய எண்ணம் வராது. * கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. * நல்ல மனதுடன் இரு. உலகமும் நல்லதாக தோன்றும். சொல்கிறார் சாரதாதேவியார்