உள்ளூர் செய்திகள்

பெற்றோரை வணங்கு

* பெற்றோரே கண்கண்ட தெய்வம். அவர்களை முதலில் வணங்கு. * உன்னை விட தாழ்ந்தவரிடமும் அன்பாக பேசு. * வரவு அறிந்து செலவு செய். அதுவே உனக்கு நல்லது. * எந்தப் பொருளின் மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை.* ஒரு உயிரை கொன்று சாப்பிடாமல் இருப்பதே உண்மையான விரதம். * கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது மிகவும் சிறப்பானது. * ஊராரை பகைத்துக் கொள்ளாதே. மீறினால் துன்பம் வரும். * சிக்கனமாக இருந்து செல்வத்தை தேடிக்கொள்.* யாரிடமும் கோபம் கொண்டு சண்டையிடாதே. மீறினால் நிம்மதி கெடும். * தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மை தரும்.* உனக்கு கிடைக்காத எந்தவொரு பொருளையும் உடனே மறந்து விடு. * சிறந்த உணவாக இருந்தாலும் காலம் அறிந்து சாப்பிடு. * மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்று. * சிறிய செயலாக இருந்தாலும் யோசித்து செய். * தினமும் காலை எழுந்தவுடன் கடவுளை வணங்கு.கட்டளையிடுகிறார் அவ்வையார்