உள்ளூர் செய்திகள்

அன்போடு கொடுங்கள்

<P>* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்களே பண்பில் சிறந்தவர்கள். பண்பில்லாதவர்களோ ஓர் இடத்தை விட்டுச் சென்றபிறகே மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.<BR>* பார்க்க முடியாத கடவுளைக் காணும் வழி காணும் காட்சி எல்லாம் கடவுளின் வடிவாகக் காண்பதே ஆகும். இறைவன் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அவனுடைய அருளே நம்மை வழிநடத்துகிறது.<BR>* தினமும் நாம் செய்ய வேண்டிய கடமை தியானம் ஆகும். ஆபத்து வந்தவுடன் கூச்சல் போட்டு ஆண்டவனை அழைப்பது தியானம் அல்ல. <BR>* உள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும்போது உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வு பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம். <BR>* நாளும் உண்மையாக வழிபாடு செய்தால் மனம் பக்குவம் அடையும். வாழ்க்கையும் சீர்படும். வாழ்வில் துன்பம் வந்தாலும் அதைச் சமாளிக்கும் நிதானத்தையும் ஆண்டவன் அருளால் உண்டாகும்.<BR>* எளிய காணிக்கையையும் ஆண்டவன் மிக உயர்வாக ஏற்றுக்கொள்கிறார். எப்போது? அன்பு ததும்பும் உள்ளத்தோடு எதைக்கொடுத்தாலும் ஆண்டவன் அதை உவப்புடன் ஏற்று மகிழ்கிறார். <BR><STRONG>சின்மயானந்தர்</STRONG></P>