உயர்ந்த நோக்கம் வேண்டும்
UPDATED : செப் 11, 2013 | ADDED : செப் 11, 2013
* மனம் வருத்தப்பட்டால் எதிலும் விருப்பம் இருப்பதில்லை. மகிழ்ச்சியாக இருந்தால் எளிய உணவு கூட ருசியாக இருக்கும். அதனால், மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொள்ளுங்கள்.* அறிவை பயன்படுத்தாத மனிதர்கள் விலங்கு நிலைக்கு தாழ்ந்து விடுகின்றனர். அவர்களால் மனதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.* நோக்கம் உயர்ந்ததாகவும், சுயநலம் இல்லாததாகவும் இருந்து விட்டால் விளைவு நம்மைப் பாதிப்பதில்லை. * கடவுள் நம்முடைய மனமாகிய வீட்டில் இருந்து இயக்குகிறார். அதை உணராவிட்டாலும் அவருடைய அருளே நம்மை நடத்திச் செல்கிறது.* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளால் முயற்சிகளில் தோல்வி உண்டாகிறது. * உயர்ந்த லட்சியத்திற்காக பணியாற்றும்போது மனதில் அரிய சக்தி தூண்டிவிடப்படுகிறது. அப்போது முயற்சித்தால் வெற்றி வந்து சேர்கிறது.- சின்மயானந்தர்