உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சியைத் தருபவர்கள் யார்?

<P>* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்கள் பண்புள்ளவர்கள். பண்பில்லாதவர்கள் ஓர் இடத்தை விட்டுச் சென்ற பிறகே மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். <BR>* இறைவன் நம்முடைய மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும் அவனுடைய அருள் நம்முடைய வாழ்க்கையில் நற்பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.<BR>* தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது வேதம். இப்படி ஒரு பின்னணியை ஏற்படுத்தி நமக்கு எளிமையாகக் கடவுள் தத்துவத்தைப் புரிய வைப்பவை புராணங்கள்.<BR>* உண்மையான கடவுள் பக்தி கொண்டவன். அவனால் பார்க்க முடியாத கடவுளை, அவன் பார்க்கக் கூடிய எல்லா உயிர்களிடமும், எல்லாப் பொருள்களிடமும் உணர்கிறான். <BR>* தினமும் நாம் செய்ய வேண்டிய கடமை தியானம். ஆபத்து வந்ததும் கூச்சல் போட்டு ஆண்டவனை அழைப்பது தியானம் அல்ல. <BR>* கடவுளின் பேரால் நாம் இருக்கும் விரதங்கள் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன. அந்தத் தூய்மையை அனுபவிக்கும்போது, கண்விழிப்பதோ பட்டினி கிடப்பதோ நமக்கு ஒரு சிரமமாகவே தோன்றாது. <BR><STRONG>சின்மயானந்தர் </STRONG></P>