விதியை மாற்ற முடியும்!
UPDATED : ஜூன் 21, 2013 | ADDED : ஜூன் 21, 2013
* ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவனுடைய நட்பை மற்றொருவர் துண்டித்துக் கொள்ள வேண்டாம்.* போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன்.* ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால், அதன் முடிவை எண்ணிப்பாரும். உம் சிந்தனையில் அதன் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்வீர். இல்லையேல் அதை விட்டு விடும்.* வெட்கம் நன்மைகளை இழுத்துவரும். உனக்கு வெட்கம் இல்லையாயின் உனது இஷ்டம் போல் நடந்து கொள். * பழித்துரைத்தல், ஒழுக்கம் கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.* எவர் ஒருவர் இறைவனிடத்தில் தேவையானதைக் கேட்கவில்லையோ அவர் மீது இறைவன் கோபம் அடைகிறான்.- நபிகள் நாயகம்