சாந்தகுணம் வேண்டும்
UPDATED : ஜூன் 10, 2013 | ADDED : ஜூன் 10, 2013
* எவர் ஒருவர் இறைவனிடத்தில் தேவையானதை கேட்கவில்லையோ அவர்மீது இறைவன் கோபம் அடைகின்றான்.* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.* நற்செயல்களைத் தவிர வேறு எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.* எவர் தமது குடும்பத்தின் நன்மையைக் கருதி செலவு செய்கின்றாரோ, அவருக்கு அல்லாஹ் தர்மத்தின் நன்மையை அளிக்கின்றான்.* அடிமை, ஏழை ஆகியவர்களுக்கு தானம் அளிப்பதை விட அதிகமான நன்மை, மனைவிக்குச் செலவு செய்வதில் உண்டு.* முதலில் முக்கியமாக நமது குடும்பத்தினருக்கு செலவு செய்வது நம் கடமை. * ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.* வாங்கும் போதும், விற்கும்போதும் சாந்த குணத்தை கடைபிடிப்பவர் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும்.- நபிகள் நாயகம்