கருணை கொள் மனமே!
UPDATED : ஆக 08, 2013 | ADDED : ஆக 08, 2013
* கஞ்சத்தனத்தைப் பற்றிப் பயந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் முன்னோர்கள் கஞ்சத்தனத்தின் காரணமாகத்தான் அழிந்து போனார்கள்.* ஒருவர் தருமம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும்.* ஒருவர் தருமம் செய்வதில் கஞ்சத்தனம் செய்கிறார்என்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கை கொள்ளாத தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.* தருமம் கொடுப்பதினால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை.* கருணை உள்ளம் கொண்டவன் தங்கும் இடம் சொர்க்கமாகும்.* அனாதை பிள்ளைகளின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். ஏழை எளியவர்களுக்கு உணவு கொடுங்கள். - நபிகள் நாயகம்