உள்ளூர் செய்திகள்

அறிவைப் பெருக்குங்கள்

* சன்மார்க்க கல்வியைக் கற்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண் மீதும் கட்டாயக் கடமை.* மனிதன் கல்விக்காகச் செய்கின்ற தர்மம் அவன் மரணித்த பிறகும் நன்மை பொழியும்.* எந்த ஒரு அடியானை இறைவன் இழிவுபடுத்த விரும்புகின்றானோ, அவனை மார்க்க கல்வியை கற்றுக் கொள்வதை விட்டும் நீக்கி விடுகின்றான்.* கற்றுக் கொடுப்பவரும் கற்றுக் கொள்பவரும் நேர்வழியில் இருக்கின்றனர். இந்த நிலை அற்றவர்களிடம் எந்த நல்வழியுமில்லை.* மார்க்கக் கல்வியைத் தேடிப் புறப்பட்டவர் திரும்பும்வரை, இறைவனின் பாதையில் இருக்கின்றார்.* அதிகமாக வணக்கம் புரிவதை விட, அறிவை அதிகமாக்கிக் கொள்வதே மேலாகும்.* கல்விக்கு அழிவே இல்லை. அதுபோன்று அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவே இல்லை.* உங்களுக்கு மார்க்க கல்வியை கற்றுக் கொடுத்தவரை கண்ணியப்படுத்துங்கள்.* கல்விக்காக தன் உயிரை விட்டவர் மரணிப்பதில்லை.- நபிகள் நாயகம்