உள்ளூர் செய்திகள்

நல்லவருடன் சேருங்கள்

* ஒருவன் நாள் ஒன்றுக்கு இருமுறையாவது பாவமன்னிப்பு கேட்கவில்லையானால் அவன் தன்னுடைய ஆத்மாவுக்கு தீமை இழைத்து விட்டான்.* இவ்வுலக வாழ்வில் மதிமயங்காமல் வாழு. அல்லாஹ் உன்னை நேசிப்பான்.* யார் சொன்ன வாக்குப்படி நடக்கவில்லையோ அவன் உண்மை முஸ்லிம் அல்ல.* கெட்ட கூட்டத்தாருடன் இருப்பதை விட தனிமையாக இருப்பதே மேல். தனிமையாக இருப்பதை விட நல்ல கூட்டத்தாருடன் இருப்பதே மேல்.* நீங்கள் எவர்களுடன் சேர்ந்து வாழுகின்றீர்களோ அவர்களுடனே நாளை மறுமையிலும் சேர்ந்து இருப்பீர்கள்.* உங்களுடைய இதயத்தை சூழ்ச்சி, பொறாமை என்ற இரு விஷயங்களைவிட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.* மனிதர்களைப் பார்த்து வெட்கப்படுவதை விட அல்லாஹ்வுக்கு வெட்கப்படுவதே உயர்வானதாகும்.- நபிகள் நாயகம்