உண்மையாய் நடந்தால் உயர்வு
UPDATED : ஆக 26, 2012 | ADDED : ஆக 26, 2012
* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு நீங்கள் உண்பதையே கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களையும் உடுத்தச் செய்யுங்கள். நீங்கள் மகிழும்படி நடக்காத ஊழியர்களை விலக்கி விடுங்கள். அவர்களைத் துன்புறுத்த வேண்டாம்.* வேலைக்காரன் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால் நீங்கள் உணவு உண்ண அமரும் போது, அவனையும் அமர்த்திக் கொண்டு அவனுக்கும் கொடுத்து உண்ணுங்கள்.* கைத்தொழிலும், மோசடி இல்லாத வியாபாரமும் தூய்மையான சம்பாத்தியமாகும்.* வியாபாரத்தில் உண்மை சொன்னால் அபிவிருத்தி ஏற்படும். பொய் சொன்னால் வியாபாரம் குறையும்.* தேவையான பொருள் உதவி செய்து விதவைகளையும், ஏழைகளையும் வாழ்விப்பவன் இறைநெறியில் ஒரு பெருங்கொடையாளியைப் போலவும், இரவு முழுவதும் தொழுபவனைப் போலவும், எப்போதும் நோன்பு வைப்பவனைப் போலவும் இருக்கின்றான்.- நபிகள் நாயகம்