உள்ளூர் செய்திகள்

நல்லதையே பேசுங்கள்

* எவர் அதிகமாக வீண்பேச்சுக்கள் பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலையை அடைவார்.* உன் நாவைப் பேணிக்கொள்! நீ செய்த பாவங்களை எண்ணி எண்ணி கண்ணீர் சிந்து!* எனக்குப் பின் நான் பயப்படுவதெல்லாம் திறமை மிக்க நாவு படைத்த நயவஞ்சகரைப் பற்றியதே!* பேசுவது வெள்ளி என்றால் பேசாமல் மவுனம் கொள்வது தங்கமாகும்.* கெட்ட வார்த்தைகள் பேசுபவன் மீது இறைவன் கோபம் அடைகின்றான்.* ஒரு மனிதன் தன் நாவைக் காத்துக் கொண்டால் அல்லாஹ் அவனுடைய மானத்தைக் காத்துக் கொள்வான்.* நாவை அடக்கியாளுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அது இயங்கட்டும். இதில் தான் வெற்றி இருக்கிறது.* மற்றவர் குறைகளை மறைப்பவர் குறைகளை இறைவன் மன்னித்து விடுகின்றான்.- நபிகள் நாயகம்