நன்றி பாராட்டுங்கள்
UPDATED : நவ 22, 2017 | ADDED : நவ 22, 2017
*ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.*காட்டு மிருகங்கள் மனிதனை கண்டு பயந்து ஓடுவது போல, இறைவனின் அருள் நன்றி கெட்டவனிடம் இருந்து ஓடி விடும்.*இயலாமை என்னும் பலவீனத்தை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு ஏற்படுவது சாத்தியமாகும்.*உணவு கொடுத்தவருக்கு நல்லருள் உண்டாக துஆ செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன். - நபிகள் நாயகம்